Monday, March 11, 2013

இன்னொரு உலகம்

வணக்கம் ..
முன்னர் இட்ட 'ஆரம்பம்'   இடுகையில்  சில புதிரான கேள்விகளோடு
முடிந்திருந்தது....  அந்த கேள்விகளுக்கான விடையுடன்  இதைத் தொடர்கிறேன் .

யார்  இந்த உலகத்தை மறைமுகமாக, தன் வசப்படுத்தி  தனது ஆட்சிக்குள்
வைத்திருப்பது....  இந்த உலகமே  அதனுடைய  ராஜாங்கம் தான்.


அதுதான்

நுண்மையான   உயிர்கள்,   நம் கண்களுக்குப்  புலப்படாதவை....

சுருக்கமாக நுண் உயிரிகள்  என்று  அறியப்படுகிறது...

எல்லோரும் இதைப் பற்றி அறிந்திருக்கலாம், ஆனலும் இந்த வலை பதிவில்
சுருக்கமாக  முடிந்தால் சரியான  விளக்கங்களுடன்   அதனை பற்றி அறிய
ஒரு பயணத்தை தொடர்வோம்... இது எளிய விளக்கங்களுடன் நமது மொழியிலேயே  தொகுத்து  வழங்கப்படுகிறது.....

இந்த இன்னொரு உலகத்தைப் பற்றி  இனி....

நுண் உயிரிகள்  

நுண்மம் என்றால் தமிழில்   மிகச்  சிறிய  நுட்பமாந கண்களுக்குப் புலப்படாதது என்று  பொருள். அதைப்  பற்றிய  சுவையான  வரலாற்றை இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன்.
 அதற்க்கு முன்
 நுண் உயிரிகள்   எவை எவை  என்று தெரிந்து கொள்வோம் ..

1. பாக்டிரியா ( Bacteria)

2. பூஞ்சை  ( Fungi)    அல்லது      காளான்கள் 

3. ஆக்டிநோ  மைசிடஸ் ( Actinomycetes)

4. புரோடோசோவா  

5. பாசிகள்  (Algae)   ஆல்கா 

6. வைரஸ்   (Virus) 


  போன்ற  இன்னும் ஒரிரு  உயரிகளை   இதற்கு உதாரணங்களாகக்  கூறலாம். 

அடுத்த பதிவில் இன்னும் இந்த உலகம் தொடரும்...









 

No comments:

Post a Comment